ஈஸ்வரன் பட்டத்தின் சிறப்பு என்ன ?ஈஸ்வரன் பட்டம் பெற்றவர்கள் யார் யார்?என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
யாரெல்லாம் ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள் சிவபெருமான் ஏன் இந்த பட்டத்தை வழங்கினார் தெரியுமா?
விக்னேஸ்வரர், நந்தீஸ்வரர், சனீஸ்வரர், ராவணேஸ்வரன், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐவர் மட்டுமே ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள்.
இதில் கூடுதலாக ஈஸ்வர பட்டத்தைப் பெற்றவர் முருகப் பெருமான் கும்பகோணம் அருகில் உள்ள திருப்பேணுபெருந்துறை (திருப்பந்துறை) சிவானந்தேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பிரணவேஸ்வரர் என்ற பட்டம் பெற்றவர்.
முருகப்பெருமான் தந்தைக்கே உபதேசம் செய்ததால் தகப்பன் சுவாமி என அழைக்கப்படுகிறார்
சிறியவனாகிய தான் தந்தைக்கு பிரணவ மந்திரத்திற்கான உபதேசத்தை செய்ததை நினைத்து முருகப்பெருமான் வருந்தினார். அந்த வருத்தத்தைப் போக்க அதற்கு பரிகாரம் தேடும் பொருட்டு இந்த திருக்கோயிலில் முருகன் ஒரு சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு மன அமைதிக்காக வேண்டினார்.
சிவபெருமான் முருகனுக்கு காட்சி தந்து, மன வேதனையுடன் இருந்த முருகனை தேற்றி நீயும், நானும் வேறில்லை, இருவரும் ஒன்றே என கூறி மனதை தேற்றினார்.
அப்போது முருகப்பெருமானுக்கு இனி உனக்கு பிரணவேஸ்வரர் என்ற பெயர் அமையும் என்றார். இந்த கோயிலில் உள்ள முருகப்பெருமானை வேண்டிக் கொண்டால் திக்குவாய் உள்ளவர்களுக்கு பேச்சு சிறப்பாக வரும், நல்ல மன ஆறுதல் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஈஸ்வரன் பட்டம் பெற்றவர்கள் யார் யார்?
ஈஸ்வரன் என்றால் உலகிலுள்ள அனைவருக்கும் தலைவன் என்று பொருள்.
ஈஸ்வரன் பட்டம் பெற்றவர்களில் நந்தீஸ்வரர் ஒருவர். இவர் சிவபெருமானை நோக்கி தன் ஆயுளை நீட்டிக்க தவம் புரிந்ததால் அவர் பக்தியில் மயங்கிய சிவபெருமான் தனக்கு நிகரான ஈஸ்வரன் பட்டத்தையும் கொடுத்து நந்தியை வணங்கிய பின்னர்தான் ஈஸ்வரனை தரிசிக்க வேண்டும் என்ற சிறப்பு அந்தஸ்தை கொடுத்தார்.
இரண்டாவது நபராக சண்டிகேஸ்வரரை பற்றி காண்போம் சண்டிகேஸ் என்பது ஒரு பதவியாகும். சண்டிகேஸ்வரர் இயற்பெயர் விசாலசருமன் ஆகும். இவர் இளமையில் மண்ணில் சிவலிங்கத்தை செய்து வழிபட்டபோது அவர் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற மாடுகள் தானாக பாலை ஊற்றி சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தன. அப்போது விசாலசருமன் லிங்கத்தின் அருகில் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதை கண்ட அவர் தந்தை அவரை அடித்தது மற்றுமின்றி லிங்கத்தை காலால் உதைத்தார். இதை கண்ட விசாலசருமன் கோபப்பட்டு தன் அருகில் இருந்த கோடாரியால் தன் தந்தையின் காலை வெட்டினார் . இதை கண்ட சிவன் அவர் முன் தோன்றி அவரின் தந்தையின் காலை குணப்படுத்தி விசாலசருமன் அவர்களுக்கு தனக்கு நிகரான ஈஸ்வரன் பட்டத்தை வழங்கினார். கைலாயத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் கொடுத்தார்.
மூன்றாவதாக, இலங்கை பேரரசர் ராவணன், ஈஸ்வரனை வணங்க கைலாயத்தை நோக்கி சென்றபோது அவருக்கு ஏற்பட்ட யோசனையால் கைலாய மலையை தூக்கி இலங்கைக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது சிவபெருமான் கோபமுற்று தனது கால் கட்டை விரலால் கைலாய மலையை அழுத்தினார். அப்போது மலையின் அடியில் அகப்பட்ட ராவணன் தனது தொடையை நரம்புகளால் சாமகான இசையை இசைத்து சிவபெருமானே மனமுருக செய்தார் இவரின் பக்தியை போற்றி தனக்கு நிகரான ஈஸ்வரன் பட்டத்தையும் வழங்கினார்.
நான்காவதாக, ஈஸ்வரன் என்றும் பாராமல் தன் கடமையில் இருந்து விடுபடாமல் தன் ஈஸ்வரனையும் ஏழரை ஆண்டு காலமாக தனது வக்கிர பார்வையால் ஆட்கொண்ட நவகிரகங்களில் ஒருவரான சனீஸ்வரருக்கு தனக்கு நிகரான ஈஸ்வரன் பட்டத்தை கொடுத்து கௌரவ படுத்தினார்
ஐந்தாவதாக, முழுமுதற்கடவுளான விக்னேஸ்வரன் ஆவார் பொதுவாக எந்த கடவுளாக இருந்தாலும் விக்னேஸ்வரரை வணங்கிய பின்னர் தான் வணங்குகின்றோம் மேலும் விநாயகரை நாம் நினைத்தபடி மஞ்சள் மற்றும் சானத்திலும் பிடித்து வழிபடுகின்றோம்.அவரும் ஈஸ்வரன் பட்டம் பெற்றவராவார்
ஆறாவதாக, ஆறுமுக கடவுளான பிரணவிஸ்வரர் . ஆம் முருகப்பெருமான் தனது தந்தைக்கு பிரணவ மந்திரத்தை கூறிய பின்னர் தந்தையை அவமானப்படுத்தியதாக எண்ணி வருத்தத்தில் இருந்தார் அப்போது சிவபெருமான் எனக்கு தெரிந்த பிரணவ மந்திரம் உனக்கும் தெரிந்ததால் தனக்கு நிகரான ஈஸ்வரன் பட்டத்தை கொடுத்து மகிழ்ந்தார்.
No comments:
Post a Comment